ADDED : அக் 02, 2025 11:24 PM

நாட்டு ம க்கள் ஆண்டுதோறும் குறைந்த பட்சம் 5,000 ரூபாய்க்காவது, காதி பொருட்களை வாங்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் உண்டாகும். உள்ளூர் பொருட்களையே வாங்குவோ ம் என்ற கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும்.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
நான் அப்படி கூறவில்லை!
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், அப்படி கூறியதாக பெரும்பாலான ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டுள்ளன. ஊடகங்களுடன் பேசுவதால், இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன.
சிதம்பரம் மூத்த தலைவர், காங்.
தன்னலமற்ற சேவை!
சுதந்திர இயக்கம் முதல் இயற்கை பேரிடர் கள் வரை, நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் முன்னின்று, ஒழுக்கம், அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ்., சே வை செய்து வருகிறது. நுாற்றாண்டை கொண்டாடும் அந் த அமைப்புக்கு வாழ்த்துகள். தன்னார்வலர்களின் தன்னலமற்ற சேவையே ஆர்.எஸ்.எஸ்.,சின் பலம்.
பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வர், ஜனசேனா