sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

/

உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

9


UPDATED : செப் 26, 2024 04:32 PM

ADDED : செப் 26, 2024 02:15 PM

Google News

UPDATED : செப் 26, 2024 04:32 PM ADDED : செப் 26, 2024 02:15 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை' என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 05 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.,26) ஹரியானா பா.ஜ., தொண்டர்களிடம் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது.

காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை. ஹரியானாவில் உள்ள மக்களுக்கு அவர்களின் உட்கட்சி மோதல்கள் தெரியும்.

கடின உழைப்பு

10 ஆண்டுகளாக பொது பிரச்னையில் இருந்து விலகி, குடும்ப நலனிற்காக செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். வாக்குச் சாவடியில் வெற்றி பெற்றவர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறார். பா.ஜ.,வுக்கு சேவை செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

ஹரியானாவின் பழைய தலைமுறை தொண்டர்களாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையினராக இருந்தாலும் சரி, அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்துள்ளது. மிகத் தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக, நகைச்சுவைத் தொனியுடனும் செய்யும் திறன் அவர்களுக்கு உள்ளது. இதை ஹரியானாவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us