sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

/

10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

22


ADDED : ஜூலை 18, 2025 12:11 PM

Google News

22

ADDED : ஜூலை 18, 2025 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

ஹரியானாவின் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, டில்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த செயலை லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனர் இந்த அரசால் துரத்தப்பட்டு வருகிறார். இந்த புதிய குற்றப்பத்திரிகை அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகும். இது அரசியல் பழிவாங்கும் செயல். ராபர்ட் வதேரா, பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் துணை நிற்பேன்.

இதுபோன்ற நெருக்கடிகளை அவர்கள் தைரியமாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மை கடைசியில் வெல்லும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.






      Dinamalar
      Follow us