sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

/

இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

இது போதாது, இன்னும் கடுமையான தண்டனை வேண்டும்: மருத்துவர்கள் போராட்டம்

26


ADDED : ஜன 20, 2025 05:22 PM

Google News

ADDED : ஜன 20, 2025 05:22 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு அளித்த ஆயுள் தண்டனை போதாது, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மாநில போலீசருக்கு பதிலாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை நடத்தினர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சஞ்சய் ராய்க்கு, கோல்கட்டா நீதிமன்றம் ஆயுள் தண்டனை, அதாவது சாகும் வரை சிறைத்தண்டனை விதித்தது.

இறந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்தத் தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும், ஆயுள் தண்டனை விதித்தது தவறானது என்று மருத்துவர்கள் கூறினர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறியதாவது:

நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்லவா? பணியில் இருந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாங்கள் திகைத்துப் போயுள்ளோம். இந்தக் குற்றத்திற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்றார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது:

இந்தக் குற்றம் 'அரிதிலும் அரிதான' பிரிவின் கீழ் வரவில்லை என்று நீதிபதி கூறினார். இது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காததை நியாயப்படுத்துகிறது.

மற்ற அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடருவோம்.

ஜூனியர் மருத்துவர்கள் கூறியதாவது:

நாங்கள் கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனையை விரும்பினோம், இந்த தண்டனை போதாது. இன்னும் கடுமையான தீர்ப்பைக் கோரி உயர் நீதிமன்றங்களுக்குச் செல்வோம் என்றனர்.






      Dinamalar
      Follow us