sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமி பலாத்கார கொலை மூன்று பேருக்கு துாக்கு

/

சிறுமி பலாத்கார கொலை மூன்று பேருக்கு துாக்கு

சிறுமி பலாத்கார கொலை மூன்று பேருக்கு துாக்கு

சிறுமி பலாத்கார கொலை மூன்று பேருக்கு துாக்கு


ADDED : நவ 08, 2024 10:53 PM

Google News

ADDED : நவ 08, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு:' சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்த மூவருக்கு துாக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தட்சிண கன்னடா, மங்களூரு புறநகரில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 2021 நவம்பர் 21ம் தேதி, திடீரென மாயமானார்.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்ததை மங்களூரு ஊரக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

அதே பகுதியில் உள்ள டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்த ஜெயசிங், 29, முகேஷ், 27, மனீஷ் திர்கி, 30, ஆகிய மூவரும் சிறுமியை கடத்தி, தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர். மூவரும் கூட்டாக சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இவர்கள் பீஹார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

ஜெயசிங், முகேஷ் சிங், மனீஷ் திர்கியை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். விசாரணையை முடித்து, தட்சிண கன்னடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், மூவருக்கும் துாக்குத் தண்டனை விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.






      Dinamalar
      Follow us