sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாரி மீது பைக் மோதி மூவர் இறப்பு மீட்பு பணியில் ஈடுபட்டவரும் சாவு

/

லாரி மீது பைக் மோதி மூவர் இறப்பு மீட்பு பணியில் ஈடுபட்டவரும் சாவு

லாரி மீது பைக் மோதி மூவர் இறப்பு மீட்பு பணியில் ஈடுபட்டவரும் சாவு

லாரி மீது பைக் மோதி மூவர் இறப்பு மீட்பு பணியில் ஈடுபட்டவரும் சாவு


ADDED : மே 17, 2025 01:29 AM

Google News

ADDED : மே 17, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதியதில், மூன்று வாலிபர்கள் பலியாகினர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய வாலிபர், மின்கம்பத்தில் பைக் மோதி பலியானார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பெரும்பழுதுாரை சேர்ந்த நண்பர்கள் அகில், 19, சாமுவேல், 20, அபின், 19. தனியார் ஊழியர்கள். நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும், சாப்பிட ஒரே பைக்கில் பாலராமபுரத்திற்கு சென்றனர்.

ஹோட்டலில் சாப்பிட்ட பின் நள்ளிரவு, 11:45 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மடவூர்பாறை பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது பைக் மோதியது. இதில், மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும், மூவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையில், விபத்து நடந்தபோது, அவ்வழியாக வந்த தான்னிவிளையை சேர்ந்த மனோஜ், 26, மீட்பு பணியில் ஈடுபட்டார். பின், பைக்கில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

மடவூர்பாறை -- தான்னிவிளை ரோட்டில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் அவர் இறந்தார். பாலராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us