ADDED : ஆக 20, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கபூர்தலா:பஞ்சாபில் நிகழ்ந்த, பஸ் - வேன் மோதலில், மூன்று பேர் பலியாகினர்.
பீஹாரை சேர்ந்த ஈஸ்வர் லால், முகேஷ் மற்றும் வேன் டிரைவர் ராகேஷ் ஆகியோர், பஞ்சாபின் கபூர்தலா நகரில் வசிக்கின்றனர். ஜலந்தர் மொத்த மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக, நேற்று காலையில், கபூர்தலா - ஜலந்தர் மெயின் ரோட்டில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.
மாண்ட் என்ற கிராமம் அருகே அவர்களின் வேன் மீது எதிரே வந்த பஸ் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை அறிந்த மூவரின் உறவினர்கள், கபூர்தலா - ஜலந்தர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'விபத்துக்கு காரணமான, தப்பியோடிய பஸ் டிரைவர் விரைவில் கைது செய்யப்படுவார்' என, போராட்டக்காரர்களிடம் போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.