sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்

/

என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்

என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்

என்.சி.சி.,யில் மூன்று லட்சம் பேர்: புதிதாக சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்


ADDED : மார் 14, 2024 06:40 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : என்.சி.சி.,யில், கூடுதலாக மூன்று லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில், என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கல்வி நிறுவனங்களிடமிருந்து ராணு அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து என்.சி.சி.,யை விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த, 1948ல் 20,000 மாணவர்களுடன் என்.சி.சி., துவங்கப்பட்டது. இப்போது அதன் தேவை அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக உயரும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும்.

இந்த ஒப்புதல் வாயிலாக இரண்டு புதிய என்.சி.சி., அலகுகள் உருவாக்கப்படுவதுடன் புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்களும் அமைக்கப்படும். மேலும் இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us