sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது

/

சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது

சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது

சிறுவனை சித்ரவதை செய்த மூன்று பேர் ம.பி.,யில் கைது


ADDED : நவ 05, 2024 12:08 AM

Google News

ADDED : நவ 05, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்துார்னா: மத்திய பிரதேசத்தில் சிறுவனை தலைகீழாக கட்டி வைத்து, தலையில் சூடுவைத்து சித்ரவதை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பந்துார்னா மாவட்டத்தில், சிறுவன் ஒருவனை சிலர் சித்ரவதை செய்யும் வீடியோ வெளியானது.

அதில், சிறுவன் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு, அவன்தலையில் சிலர் சூடு வைக்கின்றனர்.

சூடு தாங்காமல் சிறுவன் அலறுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அங்கிருக்கும் ஒரு நபர் மற்றொரு சிறுவனையும் கயிறுகளால் கட்டுவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அங்குள்ள மோஹ்கவுன் பகுதியில் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறி, அங்கிருந்த சிலர் சிறுவனை நேற்று முன்தினம் சித்ரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us