sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ந்த பீஹாரை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம்: சொல்கிறார் உத்தரகாண்ட் முதல்வர்

/

வளர்ந்த பீஹாரை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம்: சொல்கிறார் உத்தரகாண்ட் முதல்வர்

வளர்ந்த பீஹாரை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம்: சொல்கிறார் உத்தரகாண்ட் முதல்வர்

வளர்ந்த பீஹாரை மீண்டும் உறுதிப்படுத்தும் நேரம்: சொல்கிறார் உத்தரகாண்ட் முதல்வர்


ADDED : அக் 06, 2025 09:03 PM

Google News

ADDED : அக் 06, 2025 09:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வளர்ந்த பீஹாரை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான நேரமிது என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

பீஹாரில் இத்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் கமிஷன் இன்று சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது.

அதன்படி, பீஹாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில்,உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பீகார் மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளது.

இது, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, வளர்ந்த பீகாருக்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான நேரமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு இவ்வளவு வேகமாக முன்னேறி வரும் நிலையில், பீஹார் மக்கள் எப்போதும் தேசிய நலன் மற்றும் மக்கள் நலக் கொள்கையில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் தேசியவாதத்திற்கு ஆதரவாக பீஹார் மீண்டும் வாய்ப்புகளை வழங்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us