sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

/

திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

9


ADDED : செப் 20, 2024 03:27 PM

Google News

ADDED : செப் 20, 2024 03:27 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளேன், '' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு கொழுப்பு கலப்பு தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். தற்போதைய நிலை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஆலோசனை


இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு பிறகு, விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தேவஸ்தானம் விளக்கம்


லட்டு சர்ச்சை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அளித்த பேட்டி: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறியதாவது: திருப்பதி லட்டுவின் பிரசாதம் தரம் குறைந்தது குறித்து முதல்வரிடம் புகார் அளித்தோம். லட்டு மற்றும் நெய்யின் தரம் குறித்து பரிசோதனை செய்ய சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதில், அவர் சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான முடிவு தெரியவந்தது. விலங்குகளின் கொழுப்பு, மீன் ஆயில் கலந்துள்ளது தெரிந்தது. இதனையடுத்து நெய் சப்ளையர்களை அழைத்து எச்சரித்தோம். நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் ஆய்வகம் இல்லை என்பதை பயன்படுத்தி தரமற்ற நெய் விநியோகம் செய்யப்பட்டது. ஏ.ஆர். டைரி புட்ஸ் மாதிரிகளை சோதனை செய்ததில் அவை தரமற்ற நெய்யை அவர்கள் விநியோகம் செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us