sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

/

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

11


UPDATED : ஆக 19, 2025 01:11 AM

ADDED : ஆக 19, 2025 01:10 AM

Google News

11

UPDATED : ஆக 19, 2025 01:11 AM ADDED : ஆக 19, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீரட்: உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் கவாட். ராணுவ வீரரான இவர், விடுமுறைக்காக மீரட்டில் உள்ள சொந்த கிராமத்திற்கு சமீபத்தில் வந்தார்.

விடுமுறை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டில்லி விமான நிலையத்திற்குச் சென்று, பின் அங்கிருந்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்ல அவர் திட்ட மிட்டிருந்தார்.

Image 1458059அதன்படி, டில்லி விமான நிலையத்திற்கு செல்ல, தன் உறவினர் சிவம் என்பவருடன் மீரட்டில்இருந்து காரில் கபில் கவாட் புறப்பட்டார். வழியில், மீரட் - கர்னல் நெடுஞ்சாலையில் உள்ளபுனி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விமானத்துக்கு தாமதமாகி விடும் எனக் கருதிய ராணுவ வீரர் கபில் கவாட், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ராணுவ அடையாள அட்டையை காண்பித்து வழிவிடும்படி கேட்டார். ஆனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

Image 1458061இது தொடர்பாக, கபில் கவாட்டுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 10க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், கபில் கவாட்டையும், அவரது உறவினர் சிவம் என்பவரையும் கடுமையாக தாக்கினர்.

பின், கபில் கவாட்டை கம்பத்தில் கட்டி வைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து உதைத்தனர்.

இதையறிந்த உள்ளூர் மக்கள், புனி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் புனி சுங்கச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது.

வழக்கு பதிந்த போலீசார், ராணுவ வீரர் கபில் கவாட்டை தாக்கியதாக ஆறு சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தை விசாரித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புனி சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. எதிர்காலத்தில் சுங்கச்சாவடி ஏலத்தில் பங்கேற்கவும் அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us