sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

/

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி: 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

6


ADDED : ஜன 02, 2025 01:01 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:01 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, 3 வயது சிறுமி 10 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள கிரட்புரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், 700 அடி ஆழ ஆழ்துளை கிணறு உள்ளது.

டிச., 23ம் தேதி இதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி செட்னா, திறந்து கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்க முயன்றனர்.

முடியாததால், பேரிடர் மீட்புப்படையினர் மருத்துவ குழுவினருடன் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சிறுமி சுவாசிப்பதற்கு வசதியாக குழாய் வாயிலாக ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தினர். தொடர்ந்து ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி சிறுமியை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த குழி சரியான திசையில் செல்லாததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில் 700 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க டில்லி மற்றும் ஜெய்ப்பூரை சேர்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஆலோசனையின்படி, ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்பட்ட குழியின் அகலத்தை 8 அடியில் இருந்து 12 அடியாக அதிகரித்து தோண்டினர். அப்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமி செட்னா 10 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டார்.

அவரை உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.






      Dinamalar
      Follow us