sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா

/

பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா

பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா

பொய் புகார் அளித்த திருநங்கை ஆடம் பாஷா


ADDED : பிப் 17, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : லாரி டிரைவர் தன்னை தாக்கியதாக, போலீசில் பொய் புகார் அளித்த, பிக்பாஸ் போட்டியாளரான திருநங்கை ஆடம் பாஷா மீது வழக்குப்பதிவு செய்ய, போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

பெங்களூரில் வசிப்பவர் ஆடம் பாஷா. திருநங்கையான இவர், கன்னட பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றவர். விருந்து நிகழ்ச்சிகளில் நடனமும் ஆடுவார்.

கடந்த 10ம் தேதி, எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் ஆடம் பாஷா அளித்த புகாரில், 'தண்ணீர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றதை தட்டிக்கேட்டதால், லாரி டிரைவர் என்னை தாக்கி ஆடைகளை கிழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இதன் பேரில் போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில், பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆடம் பாஷாவும், அவரது நண்பர்கள் சிலரும், தண்ணீர் லாரி டிரைவரிடம் வேண்டும் என்றே தகராறு செய்ததும், ஆடைகளை ஆடம் பாஷாவை கிழித்துக் கொண்ட காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதையடுத்து பொய் புகார் அளித்த ஆடம் பாஷா மீது, வழக்குப்பதிவு செய்ய, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கன்னட நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், ஆடம் பாஷாவும் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us