தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு

டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு

டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு


ADDED : ஏப் 24, 2025 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' பயங்கரவாத அமைப்பின் தளபதி சுற்றிவளைக்கப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நேற்று முன்தினம் அப்பாவி பொதுமக்கள் மீது டி.ஆர்.எப்., பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

பஹல்காமில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள குல்காம் பகுதியில் டி.ஆர்.எப்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. தங்மார்க் பகுதியில் அவர்கள் பதுங்கியிருந்தனர்.

அங்கு ராணுவத்தினர் சென்ற போது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் சில நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இறுதியில் டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்பின் தளபதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பஹல்காம் சம்பவம் மற்றும் பயங்கரவாத அமைப்பின் திட்டங்கள், பதுங்கி உள்ள இடங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

முன்னதாக பாரமுல்லா மாவட்டம், உரி நலா பகுதிக்குள் மூன்று பயங்கரவாதிகள் நேற்று காலை ஊடுருவ முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஒரு மணி நேரம் நீடித்த மோதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us