sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

/

மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

மாணவி பலாத்காரம் டியூஷன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை


ADDED : ஜன 01, 2025 09:08 AM

Google News

ADDED : ஜன 01, 2025 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 44; டியூஷன் ஆசிரியர். 2019 ஜூலை 2ல், சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறி, பிளஸ் 1 மாணவியை டியூஷன் சென்டருக்கு வரவழைத்து, அவர் பலாத்காரம் செய்தார். மேலும், அதை மொபைல் போனில் அவர் வீடியோ எடுத்தார். இதனால் பயந்து போன மாணவி, டியூஷன் செல்வதை பாதியிலேயே நிறுத்தினார். இதையடுத்து மாணவியின் நிர்வாண படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், டியூஷன் ஆசிரியர் மனோஜை கைது செய்தனர். முதலில் குற்றத்தை மறுத்த அவர், பின் ஒப்புக் கொண்டார். இதையறிந்த மனோஜின் மனைவி, தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி பலாத்கார வழக்கை, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் விசாரித்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாணவியை பலாத்காரம் செய்த டியூஷன் ஆசிரியர் மனோஜுக்கு, 111 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.05 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.ரேகா தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.ரேகா குறிப்பிட்டார்.






      Dinamalar
      Follow us