ADDED : ஜூலை 27, 2025 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டாக்ஸி டிரைவரை துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென் கிழக்கு டில்லி, பதர்பூரில் நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, டாக்ஸி டிரைவர் கவுதம் சைனி, தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
முதலுதவி செய்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கவுதமிடம் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்தனர். அவரை துப்பாக்கியால் சுட்ட இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.