sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பால் டேங்கரில் பீஹாருக்கு மது கடத்திய இருவர் கைது

/

பால் டேங்கரில் பீஹாருக்கு மது கடத்திய இருவர் கைது

பால் டேங்கரில் பீஹாருக்கு மது கடத்திய இருவர் கைது

பால் டேங்கரில் பீஹாருக்கு மது கடத்திய இருவர் கைது


ADDED : ஜூன் 15, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஜிப்பூர்: உத்தர பிரதேசத்தில் இருந்து பால் டேங்கர் லாரியில், பீஹாருக்கு மது கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி.,யின், கோரக்பூர் - வாரணாசி நெடுஞ்சாலையில் மா என்ற பகுதியில் நேற்று பால் டேங்கர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது டேங்கரின் உள்ளே ரகசிய அறை அமைத்து, 173 பெட்டிகளில் சாராயமும், எட்டு பெட்டிகளில் விஸ்கியும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.

இது, உ.பி.,யின் காஜிப்பூரில் இருந்து மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாருக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக லாரியில் வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹாரின் பக்சார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள பார்கோடுகளை சோதனையிட்டனர். அப்போது அவை உ.பி.,யின் காஜிப்பூர் கடைகளில் வாங்கப்பட்ட மதுபானம் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us