sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்

/

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்

சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி: திரிபுராவில் இருவர் சிக்கினர்


ADDED : ஆக 15, 2025 11:48 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகர்தலா:திரிபுராவில், சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்கும் விதமாக, வாகனத்தில் வெடிபொருட்களுடன் வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சுதந்திர தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை சீர் குலைக்க சிலர் முயற்சிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வாங்க்முன் பகுதியில் வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது, 14 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த அசாமை சேர்ந்த தனஞ்செய் ரியாங் மற்றும் திரிபுராவின் சதாய் நந்தா ரியாங் ஆகியோரை கைது செய்தனர்.

வி சாரணையில், சுதந்திர தி னத்தை சீர்குலைக்கவும், போலீசாரை கொல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பிடிபட்ட இருவரும் திரிபுரா ஐக்கிய தேசியப்படை என்ற புதிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சுதந்திர தினத்தன்று நடக்க இருந்த பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us