sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு வங்கதேசத்தவர் இருவர் கைது

/

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு வங்கதேசத்தவர் இருவர் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு வங்கதேசத்தவர் இருவர் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு வங்கதேசத்தவர் இருவர் கைது


ADDED : பிப் 24, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 24, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆள் கடத்தலில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியா - வங்கதேச எல்லை வழியே ஆட்களை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ வைத்து கடத்துவதாகவும், கர்நாடகாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆள் கடத்தலில் பெரிய கும்பல் இயங்குவது தெரியவந்தது.

மேலும் கடத்தலில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில், முகமது சஜித் ஹல்தார் மற்றும் இத்ரிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இவர்கள் இருவரும் பெங்களூரின் அனந்தபுரா பகுதியில் ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் பழைய பொருட்களை சேகரிக்கும் கிடங்கு நடத்தி வந்தனர்.

அதில், 20 வங்கதேசத்தினரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர்கள் 20 பேரும் வங்கதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்டவர்கள் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us