sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி

/

டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி

டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி

டில்லியில் குடிசைகள் எரிந்து இரண்டு குழந்தைகள் பலி


ADDED : ஏப் 28, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லி ரோஹிணி 17வது செக்டார் ஸ்ரீநிகேதன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, 800 ஏக்கரில் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் நேற்று காலை தீப்பற்றியது.

தகவல் அறிந்து 26 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து, மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த 800 குடிசைகளும் எரிந்து சாம்பாலாகின. உடல் கருகி உயிரிழந்த நிலையில், இரண்டரை வயது மற்றும் 3 வயதுடைய குழந்தை உடல்கள் மீட்கப்பட்டன. காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், 'ஒரு குடிசையில் பற்றிய தீ, அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதி அருகில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, தீயை அணைப்பது பெரும் சவாலான காரியமாக இருந்தது' என்றனர்.






      Dinamalar
      Follow us