sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

/

இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

இரு பிரிவினர் மோதல்: மணிப்பூரில் ஒருவர் பலி

1


ADDED : ஏப் 29, 2024 12:01 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 12:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவு தன்னார்வலர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூவர் காயமடைந்தனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு, கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மே 3ல் இனக்கலவரம் வெடித்தது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி வந்தது.

நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இங்குள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தின் கோத்ரூக் கிராமத்தின் மீது, அண்டை மாவட்டமான காங்க்போக்பி மாவட்டத்தின் மலைப்பகுதியில் இருந்து, 12க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு அந்த கிராம தன்னார்வலர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூவர் காயம் அடைந்தனர். இந்த சண்டை அண்டை கிராமங்களான கதங்க்பான்ட் மற்றும் செஞ்ஜம் சிராங் ஆகியவற்றுக்கும் பரவியது.

ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து பழங்குடி அமைப்பு நேற்று, 12 மணி நேர கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததால் பதற்றம் நிலவியது.






      Dinamalar
      Follow us