ADDED : மே 29, 2025 08:05 PM
ஜனக்புரி: வாலிபர் ஓட்டிச் சென்ற கார் தரிகெட்டு ஓடி, சைக்கிள், குடிசைப் பகுதிகளில் மோதியது. இதில் இருவர் உயிரிழந்தனர்.
மேற்கு டில்லியின் ஜனக்புரி பகுதியில் நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் தரிகெட்டு ஒரு கார் ஓடியது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதிய கார், பின் சாலையோரம் இருந்த குடிசைப் பகுதிக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசாருடன் உள்ளூர் மக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இருவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஓட்டி வந்த 19 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். வருகின்றனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.