sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்

/

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் பிடிபட்டனர்


ADDED : ஆக 03, 2025 02:27 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயம் அடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுடில்லி வசந்த் லோகில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலைய மேலாளராக பணிபுரியும் பெண் ஜூலை, 30ம் தேதி மாலை ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை பின் தொடந்து பைக்கில் வந்த இருவர், ஆட்டோவை வழிமறித்து, ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

ஆட்டோ டிரைவர் ரஞ்சித் யாதவ் கொடுத்த தகவலையடுத்து, விரைந்து வந்த வசந்த் விஹார் போலீசார், எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கடந்த ஆண்டு அபுசைர் சபி, 30, என்பவர் மீது, அந்தப் பெண் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபி, சமீபத்தில் ஜாமினில் வந்தார். இந்நிலையில், அமன் சுக்லா என்பவருடன் சேர்ந்து, தன் மீது புகார் கொடுத்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us