ADDED : பிப் 18, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அதிவேகமாக வந்த ஆடி கார் மோதி இருவர் காயம் அடைந்தனர்.
லோதி சாலையில் ஜோர்பாக் தபால் நிலையம் அருகே, நேற்று காலை அதிவேகமாக வந்த ஆடி கார், முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
ஸ்கூட்டர் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி, அதில் இருந்த நைதிக் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆடி கார் உரிமையாளரை தேடுகின்றனர்.