sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை

/

கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை

கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை

கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை


ADDED : ஜூன் 17, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருந்த அலுவலகம் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெம்ராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளள ஆகாஷ் மற்றும் பீட்டர் ஜோசப் ஆகியோர், முறையே, கத்தி மற்றும் துப்பாக்கியுடன், டில்லி நகரின் முக்கிய சாலையில் இருந்த அலுவலகத்தில் பட்டப் பகலில் கொள்ளையடிக்க முயன்றனர்.

எனினும், அவர்களால் விலை மதிப்பு மிக்க பொருட்கள் எதையும் கொள்ளையடிக்க முடியவில்லை.

போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும், அவர்களுக்கு உதவிய முகமது யாகூப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவருக்கும் தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இதன் மூலம், இத்தகைய கொடூர குற்றத்தில் யாரும் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது. சட்டத்தின் மீதான பயம் இல்லாத அவர்கள் இருவருக்கும் உதவி புரிந்த முகமது யாகூபிற்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி ஹேம்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த குற்றம், 2015ல் நடந்தது. பத்தாண்டுகளாக பல விதமான இழுபறிகளுக்கு பின், இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us