ADDED : மார் 08, 2025 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிஜப்பூர்: சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த இரு நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வரும் நக்சலைட்டுகள் இருவர் பற்றிய தகவல் தருவோருக்கு தலா ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இருவரும் இன்று சரண் அடைந்தனர்.
பிஜாப்பூர் மாவட்டம் மாவோயிஸ்டு செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். இந்த இரண்டு நக்சலைட்டுகளும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.
பாதுகாப்பு படைகளின் தொடர்ந்த நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கைகளின் அடிப்படையில் இந்த இருவரும் சரண் அடைந்தனர்.
இந்த சம்பவம், மாவோயிஸ்டு பிரச்னையை எதிர்கொள்ளும் பகுதிகளில் அரசாங்கத்தின் மறுவாழ்வு முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுவதைக் காட்டுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்