sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை

/

டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை

டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை

டில்லி, ஹரியானாவில் இருவர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2025 03:18 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி மற்றும் ஹரியானாவில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெற்கு டில்லி சங்கம் விஹாரில் வசித்தவர் ரோஹித் சிங், 25. தச்சர். கடந்த மூன்று நாட்களுக்கு முன், மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவர் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, மன உளைச்சலுடன் இருந்த ரோஹித் சிங், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல, ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சூரஜ்குண்ட் கிரீன்பீல்டு காலனியில் வசித்தவர் மோனுசிங், 23. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், மொபைல் போனில் அவர் எடுத்துள்ள வீடியோவில், “என் சொந்த விருப்பப்படி சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறேன்,” என, கூறியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். துப்பாக்கி கைப்பற்றபட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us