sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

/

தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

9


ADDED : ஆக 14, 2025 12:33 PM

Google News

9

ADDED : ஆக 14, 2025 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசாவில் தெருநாய் கடித்து பாதிப்புக்குள்ளான தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய் தொல்லை விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்னையாகியுள்ளது. உச்சநீதிமன்றமே இது தொடர்பான வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

இப்படியிருக்கையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கடந்த ஜூலை 23ம் தேதி ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டனர். இதில், தேசிய ப்லோர் பால் பாரா விளையாட்டு வீரர் ஜோகேந்திரா சத்ரியா,33, என்பவரின் முகத்தில் தெருநாய் கடித்து குதறியது.

இதில் பலத்த காயமடைந்த ஜோகேந்திர சத்ரியா மற்றும் 48 வயதான ஹிருகேஷ் ரானா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட இருவரும் தெருநாய் கடித்த பிறகு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். இருப்பினும், சத்ரியாவின் காயங்களின் தீவிரம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ள இடம் காரணமாக தொற்று வேகமாக பரவியது,' எனக் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us