தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது

கடற்படை தள தகவலை  கசியவிட்ட இருவர் கைது


ADDED : பிப் 19, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கார்வார், கர்நாடக மாநிலம், கார்வாரில், 'சீ பேர்டு' கடற்படை தளம் உள்ளது. 2023ல் இந்த கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை சிலர் கசிய விட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஹைதராபாத் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வேவன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் முகநுால் வாயிலாக, பாகிஸ்தான் பெண் ஒருவருடன் அறிமுகம் கிடைத்தது.

அந்த பெண் கேட்டுக் கொண்டதால், கடற்படை தளத்தின் ரகசிய தகவல்களை அவருக்கு வழங்கியது தெரிந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us