தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விண்ணில் பாய தயார் நிலையில் இரு செயற்கைக்கோள்கள்

விண்ணில் பாய தயார் நிலையில் இரு செயற்கைக்கோள்கள்

விண்ணில் பாய தயார் நிலையில் இரு செயற்கைக்கோள்கள்


ADDED : ஆக 03, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மத்திய அரசு அனுமதி அளித்ததும், விண்ணில் பாய, இரண்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன.

இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான, 'நேவிக்' செயற்கைக்கோள், 10 ஆண்டு செயல்பாட்டுக்கு பின், தற்போது காலாவதியாகி உள்ளது. இதனுடன் இணைந்து செயல்பட்ட, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 2, என்.வி.எஸ் - 01 ஆகிய செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்தால் தான், இருப்பிடங்களை துல்லியமாக அறிய முடியும் என்ற நிலையில், என்.வி.எஸ்., - 03 மற்றும் ஜிசாட் - 1ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த தயாராக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும், எரிபொருள் நிரப்பப்பட்டு, அவை ஏவப்படும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us