sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

/

குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

குளியல் அறை கீசரில் வாயு கசிவு: மூச்சு திணறி இரு சகோதரிகள் மரணம்

12


ADDED : அக் 26, 2025 01:37 AM

Google News

12

ADDED : அக் 26, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: கர் நாடகாவில், குளியல் அறைக்குச் சென்ற இரு சகோதரிகள், 'கீசர்' எனப்படும் வெந்நீர் வழங்கும் மின்னணு சாதனத்தில் இருந்து கசிந்த, 'கார்பன் மோனாக்சைடு' வாயுவை தொடர்ந்து சுவாசிக்க நேரி ட்டதால், மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

கர்நாடகாவின், மைசூரு மாவட்டம், பிரியாபட்டணாவின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு நான்கு மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. குல்பம் தாஜ், 23, சிம்ரன் தாஜ், 21, ஆகிய இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் அல்தாப் பாஷா வசித்து வந்தார்.

சமீபத்தில் குல்பம் தாஜுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. வீட்டில், கடந்த 23ம் தேதி சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து. மணமகன் வீட்டினரும் வந்திருந்தனர்.

அன்றிரவு, 7:00 மணியளவில் சகோதரிகள் இருவரும் ஒன்றாக குளிக்கச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம்அடைந்த பெற்றோர் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிரியாபட்டணா போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர் பிரமோத் குமார் கூறுகையில், “குளியல் அறையில், கீசரில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்துள்ளது. இதை சுவாசித்த இளம்பெண்கள் மூச்சுத்திணறி இறந்ததாக தெரிகிறது.

''எனவே, குளியல் அறையில் கீசரை பயன்படுத்தும்போது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குளியல் அறையில் வென்டிலேட்டர் உள்ள இடத்தில் கீசர் வையுங்கள்,” என்றார்.






      Dinamalar
      Follow us