பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை: ஜம்மு - காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்
பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை: ஜம்மு - காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : நவ 09, 2024 12:34 AM

ஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் ஊடுருவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாரமுல்லா மாவட்டம் பானிபோராவில் உள்ள சோபோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் சுட்டனர்.
பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் நீடித்தது.
இதன் முடிவில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.