sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

/

இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு

இரு போர் கப்பல்கள் கடற்படையிடம் ஒப்படைப்பு


ADDED : டிச 21, 2024 11:05 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மசாகன், நம் நாட்டு கடற்படைக்கு ஐ.என்.எஸ்., நீலகிரி மற்றும் ஐ.என்.எஸ்., சூரத் ஆகிய இரு போர்க்கப்பல்களை தயாரித்து ஒப்படைத்தது.

இதில், ஐ.என்.எஸ்., நீலகிரி, எதிரிகளின் ரேடாரில் இருந்து மறைந்து செயல்படக் கூடியது. ஐ.என்.எஸ்., சூரத் கப்பல் எதிரிகளின் ஏவுகணையை தாக்கி அழிக்கக் கூடியது. தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த இரு கப்பல்களும் விரைவில் கடற்படையில் இணைக்கப்படும்.

மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல்களை, கடற்படையின் போர்க் கப்பல் வடிவமைப்பு துறை வடிவமைத்தது. கப்பல் கட்டும் பணியை மும்பை போர்க்கப்பல் மேற்பார்வைக் குழு கண்காணித்தது.

இந்த இரு கப்பல்கள் குறித்து மசாகன் நிறுவனம் கூறியுள்ளதாவது:

ஐ.என்.எஸ்., நீலகிரி கப்பலின் தோற்றம் ரேடாரில் இருந்து மறைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்பில் வரும் கப்பல், கப்பலை தாக்கும் ஏவுகணை மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை தாக்கும் வகையில் ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ்., சூரத் போர் கப்பலில் நிலத்தை குறிவைக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, வானில் உள்ள இலக்கை குறிவைக்கும் பாரக் 8 ஏவுகணை மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை கொண்டிருக்கும். மேலும், இதில் பல்வேறு வகையான ராக்கெட் லாஞ்சர்களை ஏவும் வசதியும் உண்டு.

இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us