sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

/

உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

9


UPDATED : அக் 17, 2024 07:15 AM

ADDED : அக் 17, 2024 02:39 AM

Google News

UPDATED : அக் 17, 2024 07:15 AM ADDED : அக் 17, 2024 02:39 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ''எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதன்மையான குறிக்கோளை அடைய நேர்மையான பேச்சு முக்கியம்,'' என, பாகிஸ்தானில் தெரிவித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''இரு அண்டை நாடுகளுக்கு இடையே உறவுகள் ஏன் முறிந்தன என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இஸ்லாமாபாத் சென்றிருந்தது. நேற்று நடந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது:

நம்பிக்கை இல்லாவிட்டாலோ அல்லது போதுமான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தாலோ, நட்பைக் குறைத்துவிட்டாலோ, நல்ல அண்டை நாடு இல்லாமல் இருந்தாலோ, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காரணங்களும், அதற்குத் தீர்வு காண்பதற்கான காரணங்களும் நிச்சயமாக இருக்கும்.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள், பிரிவினைவாதம், தீவிரவாதத்தால் வகைப்படுத்தப்பட்டால், அவை வர்த்தகம், ஆற்றல் ஓட்டம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.

பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மேலும், பரஸ்பர நம்பிக்கையுடன் கூட்டாக முன்னோக்கி நகர்ந்தால், எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகள் பெரும் பயனடையலாம்.

எனவே, எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, நட்பு மற்றும் நல்லுறவு அவசியமாகிறது.

பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். அது, உண்மையான கூட்டாண்மையால் மட்டுமே சாத்தியம். ஒருதலைபட்ச முடிவுகளால் அல்ல.

அண்டை நாடுகளுடன் நல்லுறவும், பரஸ்பர நம்பிக்கையும் இல்லாமல் போனால், அது ஏன் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்றைய முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடுவதே எஸ்.சி.ஓ., அமைப்பின் குறிக்கோளாக உள்ளது. அதை அடைய நேர்மையான பேச்சு அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டுக்கு பின், எஸ்.சி.ஓ., அமைப்பின் எட்டு முடிவுகள் அடங்கிய ஆவணங்களில் ஜெய்சங்கர் கையெழுத்திட்டார். அடுத்த எஸ்.சி.ஓ., மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் ரஷ்யாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிக்கல் இருந்து வரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை.

8 ஒப்பந்தங்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஒப்பந்தங்களின் விபரம்:1 ஓர் பூமி, ஓர் குடும்பம், ஓர் எதிர்காலம் என்ற திட்டத்தின் முன்னெடுப்பு2 எஸ்.சி.ஓ., ஸ்டார்ட் அப் மன்றம், ஸ்டார்ட் அப்பில் சிறப்பு பணிக்குழு அமைத்தல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்3 டிஜிட்டல் பொது உட்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்தல்4 சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா முன்னெடுத்துள்ள, 'லைப்' திட்டத்தை முன்னுதாரணமாக பின்பற்றுவது5 தினை போன்ற சத்துள்ள தானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வாயிலாக உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல்6 சர்வதேச சட்டம், ஐ.நா., மற்றும் எஸ்.சி.ஓ., சாசனத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க நியாயமான மற்றும் சீரான இணைப்பு திட்டங்களை நிலைநிறுத்துதல்7 உலக வர்த்தக மைய விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான பலதரப்பு வர்த்தக அமைப்பை மீண்டும் வலியுறுத்துதல்8 பலதரப்பு வர்த்தக அமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் உலகளாவிய நிலையான வளர்ச்சியைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஒருதலைபட்ச பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை எதிர்ப்பது.



பாக்., பிரதமர்

மறைமுக பேச்சுசாலை மற்றும் கடல் மார்க்கமாக ஆசியாவை ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும், 'சீன பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது. சீனா - பாகிஸ்தான் வர்த்தக உறவை வலுப்படுத்தும் பொருளாதார வழித்தட திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. இதில், இந்தியா ஆர்வம் காட்டவில்லை. அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போதும், வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்க கூடாது என தெரிவித்தார்.பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், ''குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் இத்தகைய திட்டங்களைப் பார்க்காமல், பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியத்தின் பகிரப்பட்ட பார்வையை முன்னேற்றுவதற்கு முக்கியமான நம் கூட்டு இணைப்புத் திறன்களில் முதலீடு செய்வோம்,'' என, இந்தியாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.








      Dinamalar
      Follow us