sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்

/

சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்

சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்

சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்

4


ADDED : ஜூலை 26, 2025 04:16 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:16 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதேநேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.,கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த சூழலில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:

பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதே நேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை. 2007ம் ஆண்டுகளில், சரத் பவார் அப்போது வேளாண் அமைச்சராக இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. விவசாயம் குறித்து ஒரு விவாதம் நடந்தது.

அவருக்கு நல்ல விவசாயக் கொள்கை இருந்தது. பல எம்.பி.க்கள் நன்றாகப் பேசினர். மறுநாள், எந்த செய்தித்தாளும் சரத் பவாரின் பெயரை வெளியிடவில்லை. அப்படியானால், அது செய்தியாகாதபோது அல்லது மக்கள் அதை விரும்பாதபோது நீங்கள் எப்படி ஒரு நல்ல வேலையைச் செய்ய முடியும்?

எனவே, எம்.பி.க்கள் தலைப்புச் செய்திகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஏனெனில் ஒரு நல்ல உரையை நிகழ்த்தி நல்ல வேலையைச் செய்வதன் மூலம், தொகுதி மக்களுக்கு அது பற்றித் தெரியாது.

பொதுமக்களும் அதைக் கேட்பதில்லை, அது செய்திகளில் வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழலில், தனது அதிருப்தியை கிரண் ரிஜிஜூ வெளிப்படுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us