sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவில் விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: டாவோஸில் மத்திய அமைச்சர் பெருமிதம்

/

இந்தியாவில் விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: டாவோஸில் மத்திய அமைச்சர் பெருமிதம்

இந்தியாவில் விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: டாவோஸில் மத்திய அமைச்சர் பெருமிதம்

இந்தியாவில் விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: டாவோஸில் மத்திய அமைச்சர் பெருமிதம்

1


ADDED : ஜன 23, 2025 09:00 PM

Google News

ADDED : ஜன 23, 2025 09:00 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாவோஸ்: உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் 3வது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை கொண்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 55வது ஆண்டு கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பங்கேற்றுள்ளார்.

டாவோஸில் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி:

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே அந்த ஆற்றலுடன், இந்தியாவிற்கு அதன் சொந்த பெரிய விமானப் போக்குவரத்து மையம் இருக்க வேண்டும்.

டில்லி நாட்டின் பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாகவும் செயல்படும் திறனை கொண்டிருக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டில்லியை ஒரு பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக நிறுவ விரும்பும் திட்டம் எங்களிடம் உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.

இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.






      Dinamalar
      Follow us