sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சித்துாரில் மருதுபாண்டியர் வெண்கல சிலை திறப்பு

/

சித்துாரில் மருதுபாண்டியர் வெண்கல சிலை திறப்பு

சித்துாரில் மருதுபாண்டியர் வெண்கல சிலை திறப்பு

சித்துாரில் மருதுபாண்டியர் வெண்கல சிலை திறப்பு

1


ADDED : ஆக 15, 2025 12:55 AM

Google News

1

ADDED : ஆக 15, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்துார்:ஆந்திராவின் சித்துாரில், கெங்கினேனி அருகே மருதுபாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தமி ழகத்தைச் சேர்ந்த மருதுபாண்டியர் சகோதரர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளையர்களை எதிர்த்து 145 நாட்கள் போரில் ஈடுபட்டனர். அப்போது, பல நுாறு வெள்ளையர்களை போரில் கொன்று சாய்த்தனர். பின் கைது செய்யப்பட்டனர்.

கட்டபொம்மன் தம்பி ஊமைதுரை பதுங்கியிருக்கும் இடத்தை காட்டினால் உங்களை விடுதலை செய்வோம்; இல்லையென்றால் கொன்று விடுவோம் என ஆங்கிலேயர் மிரட்டினர்.

ஆனாலும், ஊமை துரையை காட்டிக் கொடுக்காமல் போரில் ஈடு பட்டனர்.

இதனால், மருதுபாண்டி சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டனர்.

அது மட்டுமின்றி மருது பாண்டியர்களின் சொந்த பந்தங்களில் இருந்த அனைத்து ஆண்களையும் ஆங்கிலேயர் கொன்று விட்டனர்.

இந்நிலையில், மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு ஆந்திராவின் சித்துாரில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், தமிழகத்தின் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சித்துார் கவுன்சிலர்கள் அலி, ஸ்ரீகாந்த், சகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us