கங்கையில் புனித நீராடினார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
கங்கையில் புனித நீராடினார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
UPDATED : ஜன 22, 2025 08:06 PM
ADDED : ஜன 22, 2025 07:26 PM

லக்னோ: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் இன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார்.
உ.பி. மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கடந்த ஜன.,13ம் தேதி கோலமாக துவங்கியது. பிப்.,26 வரை 45 நாட்கள் நடக்கிறது. இதில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளான் முக்கிய நிகழ்வாக கங்கை, யமுனை, மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தவிர வெளிநாட்டினர், துறவிகள், ஆன்மிகவாதிகள் என தினம் தினம் லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் நகரில் கூடி கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிரக்யாராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது 54 அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார். அவர்களுடன் அரசு உயரதிகாரிகளும் புனித நீராடினர்.