உ.பி.,யில் துயரம்! கோவில் திருவிழாவில் மரப்பாலம் விழுந்தது; பக்தர்கள் 7 பேர் பலி; 80 பேர் படுகாயம்
உ.பி.,யில் துயரம்! கோவில் திருவிழாவில் மரப்பாலம் விழுந்தது; பக்தர்கள் 7 பேர் பலி; 80 பேர் படுகாயம்
UPDATED : ஜன 29, 2025 05:26 AM
ADDED : ஜன 28, 2025 10:32 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கோவில் திருவிழாவில் மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் ஆதிநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மிக திருவிழா ஒன்று நடந்தது. அப்போது கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த, மர மேடை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதில் சிக்கியவர்கள் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் இல்லாததால், காயம் அடைந்தவர்களை இ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சமாளித்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.