sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

/

உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

உ.பி., கலவரம்: சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு

11


ADDED : நவ 26, 2024 12:57 AM

Google News

ADDED : நவ 26, 2024 12:57 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பலில், மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது. இதற்கிடையே, அங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வெளியாட்கள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலை இடித்து, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இதன்படி, வழக்கறிஞர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சமீபத்தில் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஆய்வு செய்ய குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டனர். ஆய்வு மேற்கொண்டோர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்; வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும், அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த வன்முறையில், மூன்று பேர் உயிரிழந்தனர். போலீசார் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, சம்பல் பகுதியில், நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை தீவிரமாவதை தடுப்பதற்காக, வெளியாட்கள் நுழைவதற்கும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என, வெளியாட்கள் யாரும் வர வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

சம்பல் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., ஜியா வுர் ரஹ்மான் பர்க் உட்பட 400 பேர் மீது, கலவரத்தை துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தபோதும், பதற்றம் நிலவுகிறது.

மக்களின் கருத்துக்களை கேட்காமல், பா.ஜ., தன் அதிகார பலத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்த முயற்சி நல்லதல்ல. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ராகுல்,

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,

நீதி வேண்டும்!



'திட்டமிட்ட சதி!'

இந்த பிரச்னை லோக்சபாவிலும் நேற்று எதிரொலித்தது. சபை நடவடிக்கைகள் துவங்கியதும், உ.பி., வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் வலியுறுத்தினர். திட்டமிட்டு சதி நடந்துள்ளதாக, சம்பல் எம்.பி.,யான சமாஜ்வாதியின் ஜியா வுர் ரஹ்மான் பர்க் கூறினார். அதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்களும், முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியில் திட்டமிட்டு இந்த வன்முறை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.“இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த ஒன்பது இடங்களில், ஏழு தொகுதிகளில் பா.ஜ., வென்றதை ஏற்க முடியாமல், எதிர்க்கட்சிகள் இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளன,” என, பா.ஜ.,வின் சாக் ஷி மகராஜ் கூறினார்.








      Dinamalar
      Follow us