sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

/

வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

16


ADDED : பிப் 16, 2025 11:59 AM

Google News

ADDED : பிப் 16, 2025 11:59 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை தர மறுத்த மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் தொற்று ஊசியை செலுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஹரித்வாரை சேர்ந்த இளைஞருக்கும், கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார்கள் ரூ.15 லட்சம் ரொக்கமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.



மேலும் ரூ.25 லட்சம் ரொக்கம் கேட்டு மணமகன் வீட்டார் அழுத்தம் கொடுத்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களில் வரதட்சணை கேட்டு மாமியார் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து பெண்ணின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் ஊசியை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us