காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்
காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்
UPDATED : ஆக 06, 2024 09:19 AM
ADDED : ஆக 06, 2024 08:38 AM

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் அருகே இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ஒருவர் பலி; இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இன்று (ஆகஸ்ட் 06) இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்; மீட்பு பணியின் போது, காயமடைந்த ஒரு போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்துள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.