sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

/

கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

18


ADDED : ஆக 27, 2025 01:02 PM

Google News

ADDED : ஆக 27, 2025 01:02 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கூகுள் மேப் காட்டும் வழியை நம்பி ஏராளமானோர் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. அந்தவகையில், ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி 9 பேரை ஏற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சித்தோர்கரில் உள்ள கனகேடா கிராமத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர், பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கூகுள் மேப் காட்டிய வழிதடத்தில் சென்று ஒரு குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் மேப்பில் அது 'அப்டேட்' செய்யப்படவில்லை. இதனால் தான் வேனில் சென்றவர்கள், கூகுள் மேப் பாதையில் சென்று ஆற்றில் விழுந்துள்ளனர்.இதுவரை, மூன்று பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது. இந்த விபத்து அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

அதிகாலை பயணத்தால் விபரீதம்!

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

கமென்ட் செய்யுங்கள்!

கூகுள் மேப் காட்டிய தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்? இது தொடர்பாக உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே!








      Dinamalar
      Follow us