sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

/

உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

உலகின் மிக நீண்ட ரயில் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

18


ADDED : ஜன 25, 2025 11:49 AM

Google News

ADDED : ஜன 25, 2025 11:49 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு காஷ்மீர்: உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த செனாப் பாலத்தில் முதல்முறையாக வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் இந்த சோதனையாக மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவு குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி காட்டியது குறிப்பிடத்தக்கது.

சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us