sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

/

ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

8


UPDATED : செப் 06, 2024 02:12 PM

ADDED : செப் 06, 2024 02:06 PM

Google News

UPDATED : செப் 06, 2024 02:12 PM ADDED : செப் 06, 2024 02:06 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர், 'ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 66 வேட்பாளர்களின் பெயர்களை, காங்., மேலிடம் இறுதி செய்து விட்டது.

இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வுக்கு எதிரான பிரபலங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதற்கு வசதியாக, ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், முன்னாள் வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கிடைத்துள்ளனர்.

காங்கிரசில் இணைகிறாரா?

காங்கிரஸ் அழைப்பின்பேரில், சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது முதலே, இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜினாமா

இந்த சூழலில் தான், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய ரயில்வேயில் சேவையாற்றியது என் வாழ்வில் மறக்கமுடியாத மற்றும் பெருமையான தருணம். ரயில்வே துறையில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்தேன்.

ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வேயின் திறமையான அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். தேசத்திற்கு சேவை செய்ய ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக, இந்திய ரயில்வே குடும்பத்தினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்' என பதிவிட்டுள்ளார். அடுத்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us