ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனை; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் கருத்து
ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனை; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் கருத்து
UPDATED : ஜன 28, 2026 10:57 PM
ADDED : ஜன 28, 2026 10:51 PM

புதுடில்லி: “பார்லிமென்ட் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை தொலைநோக்கு சிந்தனை கொண்டது,” என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: பார்லிமென்ட் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில், நம் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தை தெளிவாக கூறியுள்ளார்.
எதிர்காலத்துக்கான நம்பிக்கையான ஒரு செயல் திட்டத்தையும் கோடிட்டுக் காட்டினார். நாட்டு வளர்ச்சியின் முழுப் பரிமாணத்தையும் அவரது உரை உள்ளடக்கியிருந்தது. இது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடையும். மக்களை மையப்படுத்திய வளர்ச்சியை பிரதிபலித்தது.
வலிமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ந்த இந்தியாவை உருவாக்க கூட்டு லட்சியத்தையும் வெளிப்படுத்தியது. ஜனாதிபதியின் உரை தொலைநோக்கு சிந்தனை கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

