sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டுநர் இல்லா 2வது மெட்ரோ ரயில் வருகை

/

ஓட்டுநர் இல்லா 2வது மெட்ரோ ரயில் வருகை

ஓட்டுநர் இல்லா 2வது மெட்ரோ ரயில் வருகை

ஓட்டுநர் இல்லா 2வது மெட்ரோ ரயில் வருகை


ADDED : பிப் 10, 2025 07:26 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'நம்ம மெட்ரோ' மஞ்சள் பாதையில் இயங்கவுள்ள ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில், நேற்று பெங்களூரின் ஹெப்பகோடியை வந்தடைந்தது.

இது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மெட்ரோ மஞ்சள் பாதை பணிகள் முடிந்துள்ளன. இப்பாதை ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே 18.8 கி.மீ., துாரம் கொண்டதாகும். இதில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படும். சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.

தற்போது இருக்கும் ஒரு ரயிலை பயன்படுத்தி, புதிய பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது ரயில் ஹெப்பகோடி டிப்போவை இன்று (நேற்று) வந்தடைந்தது.

மஞ்சள் பாதையில் இயக்கப்பட உள்ள, ஓட்டுனர் இல்லாத ரயில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள, 'டிடாகர்' ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரானது. தற்போது வந்துள்ள ரயிலை பயன்படுத்தி, சிக்னலிங் பரிசோதனை நடத்தப்படும்.

இன்று (நேற்று) வந்த ரயில் உட்பட ஓட்டுநர் இல்லாத இரண்டு ரயில்கள் வந்துள்ளன. மார்ச் முதல் வாரம் மூன்றாவது ரயில் வரும் என, எதிர்பார்க்கிறோம்.

அதன்பின் இப்பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும். ஓட்டுநர் இல்லாத ரயில், அதிநவீன தொழில் நுட்பம் கொண்டதாகும்.

மஞ்சள் மெட்ரோ பாதையில், பொம்மசந்திரா, ஹெப்பகோடி, ஹுஸ்கூர் சாலை, இன்போசிஸ் பவுண்டேஷன், எலக்ட்ரானிக் சிட்டி, பெரட்டேனே அக்ரஹாரா, ஹொசா சாலை, சிங்கசந்திரா, கூட்லுகேட், ஹொங்கசந்திரா, பொம்மனஹள்ளி, சென்ட்ரல் சில்க் போர்டு, பி.டி.எம்., லே - அவுட், ஜெயதேவா மருத்துவமனை, ராகிகுட்டா, ஆர்.வி.சாலை நிலையங்கள் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us