sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் தொழில் கல்வி மாநாடு

/

பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் தொழில் கல்வி மாநாடு

பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் தொழில் கல்வி மாநாடு

பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் தொழில் கல்வி மாநாடு


ADDED : செப் 20, 2024 10:22 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு ஐ.ஐ.டி.,யில், இரு நாட்கள் நடக்கும் தொழில் கல்வி மாநாடு நேற்று துவங்கியது.

கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் இரு நாட்கள் நடக்கும், 6வது தொழில் கல்வி மாநாட்டை, ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்ரி சேகர் நேற்று துவக்கி வைத்தார். மாநாட்டில், 'இசட்.எப்., குரூப்' காற்றாலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதுநிலை பொது மேலாளர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்றார். ஐ.ஐ.டி., புதுடில்லி ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் ஸ்ரீதேவி உபாத்யாயுலா, தெர்மோ கெமிக்கல் வாட்டர் பிளவுபடுத்தும் செயல்முறை மேம்பாடு குறித்து பேசினார்.

ஐ.சி.எஸ்.ஆர்., அசோசியேட் டீன் அரவிந்த் அஜோய், தலைமை கல்வியாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பிரபல நிறுவன தலைவர்களும், மூத்த தொழில் மற்றும் கல்வி வல்லுநர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.

ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் அறிமுகம், கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்தது. தொழில் கல்வி மாநாடு இன்று நிறைவுபெறுகிறது.






      Dinamalar
      Follow us