sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

/

வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

14


UPDATED : ஜன 27, 2025 02:44 PM

ADDED : ஜன 27, 2025 12:40 PM

Google News

UPDATED : ஜன 27, 2025 02:44 PM ADDED : ஜன 27, 2025 12:40 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வக்பு மசோதா தொடர்பாக, 14 சட்டத்திருத்தங்களுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜன.,27) பார்லிமென்ட் வளாகத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் கூட்டம், குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தி.மு.க., எம்.பி.,க்கள் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குழுவின் அறிக்கையை அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பின்னர் கூட்டுக்குழு கூடி ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், வக்பு மசோதா தொடர்பாக, 14 சட்டத்திருந்தங்களுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.

ஏற்கனவே, கடந்த ஜனவரி 24ம் தேதி நடந்த கூட்டத்தில், விதிமுறை மீறி கோஷம் எழுப்பிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பார்லி., கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us